குமரி மாவட்டத்தில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உணவு பழக்கம், சுற்றுசூழல் பாதிப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் தரவுகளின்படி வருடம்தோறும் 2.5% இத்தகைய பாதிப்பு உள்ளானோர் அதிகரித்து வருவதாக தெரிவிக்கிறது. தமிழகத்தில் 2012ல் 53 ஆயிரமாக இருந்தவர் எண்ணிக்கை 2023 ல் 92 ஆயிரமாக அதிகரித்தது. குறிப்பாக நுரையீரல், கருப்பபை, மார்பு, கணையம், சிறுநீர், தோல் , புரோஸ்டேட் புற்றுநோய்களால் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழகத்தில் ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,…